Tuesday, October 5, 2010

மரணமெனும் சிறுவன்





ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது வந்த தீபாவளிமுந்திய நாள் ஆரம்பித்துஅடுத்த நாள் இரவு மிக ஆரவாரமாக போய்க் கொண்டிருந்ததுஎனக்கு அப்பா நூறு அல்லது இருநூறு ரூபாய்க்கு பட்டாசு வாங்கித் தருவார்மத்தாப்புபுஸ்வாணம், சங்கு சக்கரம் சகிதம்பொன்னை செலவழிப்பது போல பட்டாசு கொளுத்துவேன்சில நாட்கள் கழித்து வரும் திருக்கார்த்திகைக்கும் இதில் மிஞ்சியதை வைத்து தான் சரி கட்டவேண்டும்

'ப்ளாக் வீடுகளின் சிறுவர்கள் விடும் ராக்கெட் ரகங்கள்  'பிப்ளாக்கில் இருந்த எனக்கு வாங்கித் தரப்படவில்லைஇன்னும் ஒரு பாக்கெட் ஆட்டம் பாம்ப்ஒரு பாக்கெட் சீனி வெடி, 2 பாக்கெட் லட்சுமி வெடி,, 4 டப்பா மத்தாப்புஒவ்வொரு பாக்கெட் புஸ்வாணமும்சக்கரமும் மீதமிருந்தது (சீனி வெடி தவிர மற்றவைகளில் பாதி கார்த்திகைக்கு வைப்பு நிதியாக்க வேண்டியிருந்தது). 

மாலை தூர்தர்ஷன் தமிழ் சிறப்பு படம்தெவிட்டும் இனிப்புகளுடன் முடித்துவிட்டு கடைசி ரவுண்ட் வெடிவைப்புக்கு பால்கனியில் எடுத்து வைத்துக் கொண்டிருந்தேன்பத்து அடி இடைவெளி விட்டு குவாட்டர்ஸ் முற்றத்தில் அரை ட்ரவுசர் போட்ட சிறுவன் நின்று கொண்டிருந்தான்புது உடுப்பு என சொல்வதற்கில்லைகிழிசல் இல்லைடம்டமால் என்று சத்தமும்பல வண்ணங்களில் ஒளிர்ந்து அணைந்து கொண்டிருக்கும் வாணவேடிக்கைகளுக்கு நடுவே அவன் அசைவே இல்லாமல் என்னை பார்த்துக் கொண்டிருந்தான்எதற்காக வந்திருக்கிறான் என தெரியும்சீனி வெடி பாக்கெட்பால்கனியிலிருந்து குதித்து வெளியேறினால் அவனை கடந்து தான் அடுத்த ப்ளாக் நண்பர்களை அடைய முடியும்பார்வையை தவிர்த்து பட்டசுகளை கலைத்து அடுக்கிக் கொண்டிருந்தேன்போய் தொலைவான் என நினைத்தேன்.


என் அருகில் வந்து, 'அண்ணே...'
'ம்ம்ம்...', வேறெங்கோ பார்த்துக் கொண்டு...
என் முகத்தை பார்த்து விட்டுவெடி பாக்கெட்டை பார்த்து விட்டுஎன் முகத்தை பார்த்தான்.
மாலை இருட்டில் அவனின் கறுமை நிறத்திற்குகண்களின் வெள்ளை பகுதி தனியாக புலப்பட்டதுசெருப்பு இல்லாத வெற்றுப் பாதங்கள்.
'ஒரு பொட்டு வெடி அண்ணே..'
பொட்டு வெடியென்று சீனி வெடியைதான் சொல்கிறான் என தெரிந்தும்  'தப்பாக' குறிப்பிட்டு விட்டான் என நியாயப்படுத்தி,
'பொட்டு வெடி எங்க..ஒண்ணும் இல்ல போ!..'
குரூரம் என உறைத்ததுஇருந்தும் வெடியை விட்டுக் கொடுக்க முடியவில்லைஅவன் கண்களின் வெள்ளை மேல் நோக்கி என்னை பார்த்த போது சந்திக்க முடியாததாக இருந்ததுகௌரவத்திற்கும்குற்றவுணர்ச்சிக்கும் சமரச புள்ளியாக - இன்னொருமுறை கேள் தருகிறேன் என மனது அவனிடம் கேட்டதுஇன்னொரு மூலையில் கேட்காமல் போய் விடு என்றும் சொல்லிக் கொண்டிருந்தது

ஒரு அடி பின்னகர்ந்து நின்றான்கண்கள் மட்டும் என்னை விட்டு அகலவில்லைஎன்னால் ஒரு அடி கூட அசைய முடியாது என தோன்றியதுமனது ஒரு சிறு வெளியில் முன்னும் பின்னும் முட்டி விழுந்து கொண்டேயிருந்தது
சிகரெட்டை பற்ற வைத்துக் கொண்டே கதவை திறந்து பால்கனிக்கு அப்பா வந்து,
'என்னடா வேணும்?'
யாரோ ஜன்னலை திறந்து விட்டது போலிருந்தது.
'பொட்டு வெடி சார்'
'லேய்.. கொஞ்சம் குடுடா..'
'எங்கிட்ட ரோல் கேப் இல்லப்பா..'
குரல் உயர்ந்து, 'அதான் சீனி வெடி இருக்குல்ல...குடுடா...'
ஒரு கை அள்ளி கொடுத்தேன்திருப்தியுடன் அப்பவை பார்த்து விட்டு அவன் போனான்.
அப்பா தணிந்து, 'இருக்குறதை குடுக்கணும்', என்று புகைக்க ஆரம்பித்தார்.
எதிர்த்து பேசினால் அந்த தீபாவளி அங்கே, அப்பொழுதே முடியும் என தெரிந்ததால்மீதி பட்டாசுடன் அடுத்த ப்ளாக் நண்பர்களுடன் ஐக்கியமாகி விட்டேன்சிறிது நேரத்தில் மனதிலிருந்தும் அச்சம்பவம் மறதியில் போய்விட்டது.

தேவதேவனின் கவிதை ஒன்றை சில நாட்களுக்கு முன் வாசிக்க நேர்ந்தது.

பனைகள்

பனைகளின் தலைகளெங்கும்
பறவைகளின் சிறகுகள்
பச்சைப்பனைகளின் நடுவே
ஒரு மொட்டைப் பனை
மொட்டைப்பனை உச்சியிலே
ஓர் பச்சைக்கிளி
அடங்கிவிட்டது
'மரணத்தை வெல்வோம் ' என்ற கூச்சல்
மரணமும் வாழ்வாகவே விரும்புகிறது
இனி இங்கே நான்
செய்யவேண்டியதுதான் என்ன ?
'நானே தடைகல் 'ஆகும்வழியறிந்து
வழிவிடுவதை தவிர ?
பனைகளின் தலைகளெங்கும்
படபடக்கும் சிறகுகள்
பாவம் அவை பூமியில்
மரணத்தால் நங்கூரமிடப்பட்டுள்ளன.

இரண்டாவது முறை வாசித்த போது,
"மரணமும் வாழ்வாகவே விரும்புகிறதுஎன்ற வரிமேலே நடந்த சம்பவத்தை மன ஆழங்களிலிருந்து நீர் குமிழி போல் வெளி வர செய்ததுஅந்த வீடுஎன் பட்டாசுஅப்பாஅவன்நான் எல்லாம் தெளிவில்லாமல்ஆனால் அவன் கண்களின் வெள்ளை மட்டும் மிக அருகாமையில் உள்ளதுஅவ்வரிகளில் சொல்லப்பட்ட மரணம் அச்சிறுவனை போல சற்று தூரத்தில் நிற்கின்றதுஅவனும் கொண்டாட வேண்டும் ஆனால் அதற்கு என் கொண்டாட்டத்தின் சாரத்தை அவனுக்கு கொடுத்தாக வேண்டும்.

நெஞ்சிலிருந்து அதன் பிறகு அக்கவிதையும் அதன் தொடர்பும் மறைய மறுக்கிறது.
அவன் அப்படி பலவந்தமாக என்னிடமிருந்து வாங்கி  போனானென்றாலும் ஒரு விடுதலை உணர்வு மிக சொற்ப நேரம் அன்று உணர்ந்தது நினைவுகளில் உள்ளது.

'நானே தடைகல் 'ஆகும்வழியறிந்து
வழிவிடுவதுஅதுதானோ?

முதன்முறையாக மரணத்தை விளையாட ஆசைப்படும் ஆனால் யாரும் சேர்த்துக் கொள்ள மறுக்கும்பாவம் ஒரு சிறுவனாகமனமார உணர்ந்தேன்மரணம் என்றால் இன்னும் மரண பயம்தான்கவிதையை வாசித்து கொண்டே அச்சம்பவத்தை கூடவே மனதில் ஓடவிடும் வினாடிக்கும் குறைவான நேரத்தில், 'ஐயோ பாவம்..' என்று அச்சிறுவனை நினைக்க தோன்றுகிறதுஅப்பொழுது அச்சிறுவன் வெடி கேட்டு வந்த அதே சிறுவனல்ல என்பது ஒரு வித்தியாசமானஅமானுஷ்யமான உணர்வு.

அந்த சிறுவனும் இன்றில்லைநானும் இல்லைஒரு கவிதை இரு கண்களையும்ஆழத்தில் அமிழ்ந்த ஒரு ஞாபகக் கீற்றையும் மரணம் என்ற நித்ய இருப்புடன் இணைத்தது எனக்கு ஒரு ஆச்சரியமான அனுபவம்.

No comments: