Monday, September 20, 2010

ஊமை சாட்சி

இரவு தொடங்கிய நேற்று
புரை படிந்த பூனையின் ஒற்றை கண்ணை
போல் நிலா
என் நெற்றியின் மேல்  மிதந்தது
என் வீதியின் தனிமையை போக்க
யார் முதலில் கண் சிமிட்டுவார்
என்று அதனிடம் விளையாடிக் கொண்டே நடந்தேன்
என் கண்கள் அசைந்தாலும் சிமிட்டவில்லை
நிலவின் பார்வையில்
அசைவில்லை சலனமில்லை
வெறும் ஒரு பார்வை
தோற்பேனோ என நினைத்து
கண்ணை குறுக்கி ஆழ்ந்து நோக்க
நிலவின் உள்ளே
கசடுகளை தாண்டி
ஒரு குழியில்
தலையை உயர்த்தி ஒருவன்
என்னையே பார்த்திருந்தான்,
கண்களை விலக்கி
நெஞ்சு விம்ம வீட்டுள் ஓடி
தாழிட்டுக் கொண்டேன்
அன்றிரவு என் சுவரில்
நிலவொளியுடன் சேர்ந்து
அவன் பார்வையும்
படர்ந்து கிடந்தது.

No comments: