முந்திரி
காடுகளை மையமாக கொண்ட அடித்தள
மக்களின் வாழ்க்கையை சொல்லும் கதைகளே கண்மணி குணசேகரனின்
உயிர் தண்ணீர் சிறுகதை தொகுப்பு.
முதல் தொகுதி அந்த குடும்பங்களின்
பெண்களை மையமாக கொண்டும் மறு
பாதி ஆண்களை மையமாக கொண்டும்
உருவாக்கப்பட்ட சிறுகதைகளை கொண்டுள்ளது. சாதி அடுக்கிலும், பொருளாதார
நிலையிலும் அடித்தளத்தில் உள்ள மனிதர்களின் வாழ்கை
அவர்களின் வட்டார வழக்கிலேயே கதைகளாக விரிகின்றன. எனக்கு மிகவும் பிடித்த சில கதைகளை
மட்டும் குறிப்பிடுகிறேன்.
அழுத்தி
கொண்டிருக்கும் வறுமை, சீக்கிரத்தில் விட்டு கொடுக்க முடியாத தன்மானம், குடும்ப மானம்,
இவைகளுக்கு இடையில் மனிதனுக்கே உரிய சிறு ஆசைகளையும், ஏக்கங்களையும் கொண்ட மனது என
பெண்களின் வாழ்கை தருணங்கள் முதற் பாதியின் கதைகளாக உள்ளன.