Wednesday, October 20, 2010

ஒற்றை செறுப்பு

திசைகள் சங்கமிக்கும்
இடத்தில் கிடந்தது
தனிமையில் குழந்தையின்
ஒற்றை செறுப்பு

கால்களை தொலைத்து
துணையை பிரிந்து
யாரோ வரும் வழி நோக்கி
சுணங்கியபடியே

மலரா பாதங்களின் வெம்மை
ஒன்றையே அறிந்தவனுக்கு
இனி
காலி வீட்டின் முன் நாளிதழ்
புல் மண்டிய கல்லரையின் பெயர் தூண்
என்ற
சொந்தங்களின் வழியே அறிவான்
தன் மறு பிரதிபலிப்பை

தினசரி கடந்து போகிறேன்
நம்பிக்கையுடன்
காணாமல் போய் விடுவான் என
நேற்று இன்று நாளை ...

No comments: