Sunday, August 8, 2010

தொலைந்தது

உறங்காமல் தூங்கி
விழிக்காமல் எழுந்து
உண்ணாமல் தின்று
பேருந்தின் உபரியாய்
பயணித்து
இயந்திரமாய் உழைத்து
என
ஜன்னலை திறக்க
நான்கு மாதமாயிற்று...
அதனடியில்
முழு நிறத்துடன்
இரு இதழ்களை வைத்துவிட்டு
இயற்கையாய் மரணித்திருந்தது
என் தொட்டிச் செடி

No comments: