திசைகள் சங்கமிக்கும்
இடத்தில் கிடந்தது
தனிமையில் குழந்தையின்
ஒற்றை செறுப்பு
கால்களை தொலைத்து
துணையை பிரிந்து
யாரோ வரும் வழி நோக்கி
சுணங்கியபடியே
மலரா பாதங்களின் வெம்மை
ஒன்றையே அறிந்தவனுக்கு
இனி
காலி வீட்டின் முன் நாளிதழ்
புல் மண்டிய கல்லரையின் பெயர் தூண்
என்ற
சொந்தங்களின் வழியே அறிவான்
தன் மறு பிரதிபலிப்பை
தினசரி கடந்து போகிறேன்
நம்பிக்கையுடன்
காணாமல் போய் விடுவான் என
நேற்று இன்று நாளை ...
Wednesday, October 20, 2010
Tuesday, October 5, 2010
மரணமெனும் சிறுவன்
ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது வந்த தீபாவளி. முந்திய நாள் ஆரம்பித்து, அடுத்த நாள் இரவு மிக ஆரவாரமாக போய்க் கொண்டிருந்தது. எனக்கு அப்பா நூறு அல்லது இருநூறு ரூபாய்க்கு பட்டாசு வாங்கித் தருவார், மத்தாப்பு, புஸ்வாணம், சங்கு சக்கரம் சகிதம். பொன்னை செலவழிப்பது போல பட்டாசு கொளுத்துவேன். சில நாட்கள் கழித்து வரும் திருக்கார்த்திகைக்கும் இதில் மிஞ்சியதை வைத்து தான் சரி கட்டவேண்டும்.
'ஏ' ப்ளாக் வீடுகளின் சிறுவர்கள் விடும் ராக்கெட் ரகங்கள் 'பி' ப்ளாக்கில் இருந்த எனக்கு வாங்கித் தரப்படவில்லை. இன்னும் ஒரு பாக்கெட் ஆட்டம் பாம்ப், ஒரு பாக்கெட் சீனி வெடி, 2 பாக்கெட் லட்சுமி வெடி,, 4 டப்பா மத்தாப்பு, ஒவ்வொரு பாக்கெட் புஸ்வாணமும், சக்கரமும் மீதமிருந்தது (சீனி வெடி தவிர மற்றவைகளில் பாதி கார்த்திகைக்கு வைப்பு நிதியாக்க வேண்டியிருந்தது).
மாலை தூர்தர்ஷன் தமிழ் சிறப்பு படம், தெவிட்டும் இனிப்புகளுடன் முடித்துவிட்டு கடைசி ரவுண்ட் வெடிவைப்புக்கு பால்கனியில் எடுத்து வைத்துக் கொண்டிருந்தேன். பத்து அடி இடைவெளி விட்டு குவாட்டர்ஸ் முற்றத்தில் அரை ட்ரவுசர் போட்ட சிறுவன் நின்று கொண்டிருந்தான். புது உடுப்பு என சொல்வதற்கில்லை, கிழிசல் இல்லை. டம், டமால் என்று சத்தமும், பல வண்ணங்களில் ஒளிர்ந்து அணைந்து கொண்டிருக்கும் வாணவேடிக்கைகளுக்கு நடுவே அவன் அசைவே இல்லாமல் என்னை பார்த்துக் கொண்டிருந்தான். எதற்காக வந்திருக்கிறான் என தெரியும். சீனி வெடி பாக்கெட். பால்கனியிலிருந்து குதித்து வெளியேறினால் அவனை கடந்து தான் அடுத்த ப்ளாக் நண்பர்களை அடைய முடியும். பார்வையை தவிர்த்து பட்டசுகளை கலைத்து அடுக்கிக் கொண்டிருந்தேன். போய் தொலைவான் என நினைத்தேன்.
Subscribe to:
Posts (Atom)